• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

January 11, 2019 தண்டோரா குழு

பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணன் ரெட்டி மீது 1998-ல் பேருந்து மீது கல்வீசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 108பேரில் 16பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 10,500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்திரவிட்டது. இதையடுத்து, பாலகிருஷ்ணன் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையில், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வழக்கில் மேல் முறையீடு செய்ய மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிபதி அமைச்சர் மேல் முறையீடு செய்வதற்காக அவரது சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது.

இதனைத்தொடர்ந்து, பாலகிருஷ்ணா ரெட்டி, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில், எரித்ததாகவோ, தாக்கியதாகவோ என் மீது நேரடி குற்றச்சாட்டு ஏதும் இல்லை. எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என்றும் சிறப்பு நீதிமன்றம் அதை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. நான் அந்த வழக்கில் 72வது குற்றவாளி. காவலர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் பழமையான வழக்கில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். 28 சாட்சிகளில் ஒரு சாட்சி தவிர வேறு யாரும் என் பெயரை கூறவில்லை. தீர்ப்பு வந்ததும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தீர்ப்புக்கு தடை விதிக்க பரிசீலிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது குறிக்கிட்ட நீதிபதி 3 ஆண்டுகள் சிறை தண்டனையை தடுக்க சொன்னால் சரி. தீர்ப்பையே ஏன் தடுக்க வேண்டும்? என சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், காவல் துறையின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.தொடர்ந்து தண்டனைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், பாலகிருஷ்ண ரெட்டியின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் பாலகிருஷ்ணன் ரெட்டி சிறைக்கு செல்வது உறுதியாகியுள்ளது.

மேலும் படிக்க