January 11, 2019
தண்டோரா குழு
எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வரும் 18ம் தேதி முதல் மூன்று நாட்கள் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில்,
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகள், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்தந்த தொகுதிகளில் பொதுக்கூட்டங்களை சிறப்பான முறையில் நடத்துமாறு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.