• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் – அதிமுக!

January 11, 2019 தண்டோரா குழு

எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வரும் 18ம் தேதி முதல் மூன்று நாட்கள் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில்,

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகள், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்தந்த தொகுதிகளில் பொதுக்கூட்டங்களை சிறப்பான முறையில் நடத்துமாறு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க