January 11, 2019
தண்டோரா குழு
பா.ஜ.கவுடன் எப்போதும் தி.மு.க கூட்டணி அமைக்காது திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பழைய நண்பர்களை கூட்டணிக்கு வரவேற்க தயார் கூட்டணிக்கு பாஜகவின் கதவுகள் என்றுமே திறந்து இருக்கும் நேற்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்நிலையில், பா.ஜ.கவுடன் எப்போதும் தி.மு.க கூட்டணி அமைக்காது திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், வாஜ்பாயுடன் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவும் விநோதமாகவும் உள்ளது.நாட்டை பிளவுபடுத்தும் எந்த திட்டத்தையும் முன்வைக்காததாலேயே வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவளித்தது. குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் தான் கலைஞர் – பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். மதவாதக்குரல்கள் எழுந்ததும் பா.ஜ.க கூட்டணியில் இருந்து தி.மு.க உடனடியாக வெளியேறியது.பிரதமர் மோடி வாஜ்பாய் அல்ல.மோடி உருவாக்கிய கூட்டணி வாஜ்பாய் உருவாக்கியது போல் ஆரோக்கியமானது இல்லை.தமிழக உரிமைகள் மோடி ஆட்சியில் தான் மிக அதிக அளவில் பறிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பண்முக தன்மையை பிரதமர் மோடி பாதுகாப்பவர் அல்ல என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.