• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்று ஆணித்தரமாக சொல்கிறேன் – மு.க.ஸ்டாலின்

January 11, 2019 தண்டோரா குழு

பா.ஜ.கவுடன் எப்போதும் தி.மு.க கூட்டணி அமைக்காது திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பழைய நண்பர்களை கூட்டணிக்கு வரவேற்க தயார் கூட்டணிக்கு பாஜகவின் கதவுகள் என்றுமே திறந்து இருக்கும் நேற்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.கவுடன் எப்போதும் தி.மு.க கூட்டணி அமைக்காது திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், வாஜ்பாயுடன் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வது வேடிக்கையாகவும் விநோதமாகவும் உள்ளது.நாட்டை பிளவுபடுத்தும் எந்த திட்டத்தையும் முன்வைக்காததாலேயே வாஜ்பாய் அரசுக்கு திமுக ஆதரவளித்தது. குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் தான் கலைஞர் – பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். மதவாதக்குரல்கள் எழுந்ததும் பா.ஜ.க கூட்டணியில் இருந்து தி.மு.க உடனடியாக வெளியேறியது.பிரதமர் மோடி வாஜ்பாய் அல்ல.மோடி உருவாக்கிய கூட்டணி வாஜ்பாய் உருவாக்கியது போல் ஆரோக்கியமானது இல்லை.தமிழக உரிமைகள் மோடி ஆட்சியில் தான் மிக அதிக அளவில் பறிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பண்முக தன்மையை பிரதமர் மோடி பாதுகாப்பவர் அல்ல என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க