January 11, 2019
அயனாவரம் சிறுமி பாலியல் கொடுமை வழக்கில் 16 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 12 வயது சிறுமிக்கு 17 பேர்க் கொண்ட கும்பல் போதை ஊசி ஏற்றியும், கத்தியை காட்டி மிரட்டியும் 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.கடந்த ஜூலை மாதம், தந்தை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்த லிப்ட் ஆப்ரேட்டர், காவலாளி உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், சிறையில் உள்ள 16 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்திரவிட்டிருந்தார்.
இதையடுத்து, தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி 16 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு முன்பு
விசாரணைக்கு வந்தது.
அப்போது, 16 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்து நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.