• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் 4 மணி நேரம் தாமதம் – பயணிகள் அவதி

January 11, 2019 தண்டோரா குழு

கோவையிலிருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

120 பயணிகளுடன் கோவையிலிருந்து டெல்லிக்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் நான்கு மணி நேரத்திற்கு பின் தாமதமாக சென்றது. இதனால் அங்கு இருந்த பயணிகள் மிகவும் கடும் அவதிக்கு உள்ளாவதுடன் டெல்லியிலிருந்து வெளி நாடுகளுக்கு செல்லக்கூடிய 6 பயணிகள் மிகவும் வேதனையடைந்து விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்,

கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதற்கான காரணம் டெல்லியிலிருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மோசமான வானிலை காரணமாக தாமதமாக வந்தது என்றும் , அதன் காரணமாக கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க