• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அயோத்தி வழக்கிலிருந்து நீதிபதி யு.யு.லலித் திடீர் விலகல்

January 10, 2019 தண்டோரா குழு

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்விலிருந்து, நீதிபதி யு.யு.லலித் விலகியுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று தொடர்பான வழக்கில் அந்த நிலத்தை 3 பாகங்களாக பிரிக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்ற வந்த இந்த வழக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.மீண்டும் வழக்கு கடந்த அக்டோபர் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையடுத்து, ஜனவரி மாதம் 4 ஆம் சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்னும் அமைக்க வில்லை. நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைத்தவுடன் விசாரிக்கப்படும் எனக்கூறி, இந்த வழக்கை வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வழக்கை மீண்டும் ஒத்தி வைத்தது.

இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்பு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு தற்பொழுது அறிவிக்கப்பட்டது. அக்குழுவில் நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதி என்.வி.ராமனா, நீதிபதி யூ.யு.லலித் மற்றும் நீதிபதி டி.ஐ.எஸ்.சந்திரச்சுட் ஆகிய நான்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்று விசாரணை நடக்காது என்றும், அதற்கான தேதி மற்றும் கால அட்டவணை குறித்து மட்டுமே முடிவு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், ராஜீவ் தவான் என்ற வழக்கறிஞர், நீதிபதி லலித் 1997 ஆம் ஆண்டு அயோத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த கல்யாண் சிங்குக்கு ஆதரவாக யூயூ லலித் வழக்கறிஞராக சுட்டிக்காட்டினார். இதனையடுத்து வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக நீதிபதி லலித் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து புதிய நீதிபதி நியமிக்கப்பட வேண்டியது இருப்பதால், வழக்கு விசாரணையை ஜனவரி 29-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் 4 பேரும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க