• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிகாரிகள் மீது பிளாஸ்டிக் பொருள் விற்பனையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

January 4, 2019 தண்டோரா குழு

தமிழக அரசு தடைவிதித்த பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் அல்லாமல் மற்ற பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்வதாக பிளாஸ்டிக் பொருள் விற்பனையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமல் படுத்தியதை தொடர்ந்து,தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களையும் அறிவித்து, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் கோவை மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் விற்பனை மற்றும் இதர கடைகளில் சோதனை மேற்கொண்டு, தடைவிதிக்கப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இதில் அரசு தடை விதிக்காத பொருட்களையும் அதிகாரிகள் வேண்டுமென்றே பறிமுதல் செய்து எடுத்து செல்வதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதாக தெரிவித்து, கோவை பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் கோவை மாநகராட்சி ஆனையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அதிகாரிகள் தொடர்ந்து இதுபோல் தடையில்லா பொருட்களை பறிமுதல் செய்வதால் கடந்த 3 நாட்ளாக கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகளை அடைக்கப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க