• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தந்தை வீட்டு வாடகை கொடுக்காததால் 8 வயது மகள் மீது மின்சாரம் பாய்ச்சிய வீட்டு உரிமையாளர் கைது

January 3, 2019 தண்டோரா குழு

மதுரையில் தந்தை வீட்டு வடைகை கொடுக்கவில்லை என வயது மகள் மீது மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்தியதாக வீட்டு உரிமையாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் கணேஷ் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் 8 வயது மகளுடன் வாடகைக்கு வசித்து வந்தார். மார்க்கெட்டிங் வேலை செய்யும் கணேஷ் குமார் கடந்த 4 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த விட்டு உரிமையாளர் மணிவண்ணன் வாடகை தராவிட்டால் வீட்டைக் காலி செய்யுமாறு கணேஷ் குமாரை வற்புறுத்திவந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பணிநிமித்தம் காரணமாக நேற்று கணேஷ் குமார் வெளியூர் சென்றுயுள்ளார். மனைவி ராஜலட்சுமியும் கடைக்குச் சென்று கடைக்குச் சென்று வீடு திரும்புகையில், தீக்காயங்களுடன் குழந்தை அழுது கொண்டிருந்தார். அவர் குழந்தையுடம் கேட்ட போது வீட்டு உரிமையாளர் மணிவண்ணனின் மகனான சந்தோஷ் தனது உடலில் மின்சாரத்தை பாய்ச்சி துன்புறுத்தியதாக சிறுமி கூறியுள்ளார். உடனே காயம்பட்ட சிறுமியை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,வாடகை கொடுக்காத காரணத்தால் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமி மீது மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்தியதாக திலகர் திடல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் சிறுமி மீது மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்தியதாக வீட்டு உரிமையாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க