January 3, 2019
தண்டோரா குழு
சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்கள் மற்றும் அதன் உரிமையாளர்களின் அலுவலகங்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பிரபல உணவகங்களுலான சரவண பவன், அஞ்சப்பர் ஆகிய ஓட்டல்களில் வருமான வரி துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று கிராண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனத்திலும் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வடபழனி, எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் சுவீட்ஸ் நிறுவன கிளைகள் உள்ளன. இங்கு இன்று காலையிலேயே புகுந்த வருமானவரித்துறையினர் விற்பனை விவரங்களையும், வரவு-செலவு கணக்குகளையும் ஆய்வு செய்தனர்.
இதேபோல் இந்த உணவகங்களுக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 32 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த 3 நிறுவனங்களும் முறையாக வருமானவரி செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.