• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி சீமான் அறிவிப்பு

January 2, 2019 தண்டோரா குழு

திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் சனவரி 14 ஆம் தேதி எனவும், திருவாரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சனவரி 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இதற்கிடையில், இந்த தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சி போட்டியிடவுள்ளது.
இந்நிலையில், திருவாரூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முறை எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது என்று கூறி இருக்கிறார். நாம் தமிழர் இளம் வேட்பாளர் ஒருவரை இந்த தேர்தலில் நிறுத்தும். ஜன.10-ம் தேதி வேட்பாளர் யார் என்று தெரியும். இதற்காக ஆலோசனை செய்து வருகிறோம் என்று சீமான் கூறியுள்ளார்.

மேலும் படிக்க