• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொங்கல் போனஸ் வழங்க கோரி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

January 2, 2019 தண்டோரா குழு

பொங்கல் போனஸ் வழங்க கோரி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஒய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை டாடாபாத் பகுதியில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் ஒய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்ணா போராட்டம் நடத்தினர். 35 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஒய்வுபெற்ற ஊழியர்களுக்கு பொங்கல் போனாஸ் வழங்க கோரியும், குறைந்தபட்ச ஒய்வூதியமாக 7 ஆயிரத்து 850 ரூபாயும், குடும்ப ஒய்வூதியம், மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்த தர்ணா போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாங்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட பேரிடும் எனவும் எச்சரித்தனர்.

மேலும் படிக்க