• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏ கருணாஸ் திடீர் சந்திப்பு !

January 2, 2019 தண்டோரா குழு

முதல்வர் மற்றும் அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறிவந்த எம்எல்ஏ கருணாஸ், இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

கடந்த ஆண்டு வரை முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து வந்தார் கருணாஸ் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரிய மனுவை வாபஸ் பெற்றதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எம்எல்ஏ கருணாஸ் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். பின்னர் முதல்வருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, சிவகங்கையில் மருது பாண்டியர் சிலை அமைக்க இடம் ஒதுக்கக்கோரி முதலமைச்சர் பழனிசாமியிடம் கருணாஸ் மனு அளித்தார்.

பின்னர், தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர்,

தோல்வியடையும் என்பதால் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப் பெற்றேன். திருவாடானை தொகுதியில் கண்மாய்களை தூர்வாரக்கோரி முதலமைச்சரை சந்தித்தேன். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க கோரிக்கை விடுத்தேன். தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க