• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

January 2, 2019 தண்டோரா குழு

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், திமுக வெளிநடப்பு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தி வருகிறார்.

தமிழக சட்டசபை இன்று கூடியது. முதல் நாள் கூட்டமான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். தமிழில் தனது உரையை துவங்கிய ஆளுநர் அனைவருக்கும் வணக்கம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.அத்துடன் எளிமையான வாழ்க்கையை வாழுங்கள், இது ஊழலை அகற்றிவிடும் இதுவே எனது செய்தி என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், ஆளுநர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆளுநர் உரையை புறக்கணித்து ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

தமிழக அரசு செயலிழந்து கிடக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை, கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது.கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை. பெற முடியாத நிலையில் மாநில அரசு உள்ளது.உயர்மின் அழுத்த கோபுரங்கள் தொடர்பாக போராடும் விவசாயிகள் மற்றும் மக்களை அழைத்து பேசமுடியாத அரசு இது உள்ளது. குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். முதலமைச்சராக இருந்தாலும், துணை முதலமைச்சராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகமே குற்றம்சாட்டியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க