கோவை சிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் ஏ.டி,.எம் மையத்தில் தீ விபத்து, ஏ.டி.எம் மையம் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.
கோவை சிங்கநல்லூர் பகுதியில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. மூன்று ஏ.டி.எம் இயந்திரங்களும் இந்த மையத்தில் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை தீடீரென ஏ.டி.எம் மையத்தில் இருந்து புகை கிளம்பி உள்ளது. மேலும் முழுமையாக தீ பிடித்து எரிந்ததாக தெரிகிறது.
அப்போது அவ்வழியாக சாலையில் சென்றவர்கள் பார்த்து தீயணைப்பு துறை மற்றும் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஏ.டி.எம் மையம் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. தற்போது வரை விபத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து இதுவரை வெளியிடவில்லை. ஏ.சி. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது அப்போது ஏ.டி.எம் மையத்திற்கு வேரு யாராவது வந்தனரா என சிங்கநல்லூர் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் கோவை வருகை சாதுர்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவம் – 65 நாட்கள் சிறப்பு பூஜை
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் – முதல் நாளில் வியக்கவைக்கும் குதிரையேற்ற சாகசங்களை செய்த 6 அணிகள்
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு
ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் 36,194 வாகனங்களை விற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா சாதனை
தமிழ்நாடு அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை விளக்கிக் கொள்ள வேண்டும் ! தமிழக தொழில் அமைப்புகளின் வேண்டுகோள்!!