• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கணவருடனான குடும்ப தகராறில் 6 வயது மகனை எரித்து கொன்ற தாய் கைது!

December 29, 2018 தண்டோரா குழு

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் 6 வயது மகனை கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்து தீவைத்து எரித்த கொலைகார தாயை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த மீனாட்சி என்பவரும், கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதியினருக்கு ஜெயகாந்தன் என்ற 6 வயது மகன் இருந்துள்ளார். இதற்கிடையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுபோல நேற்று முன் தினமும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மீனாட்சி தனது மகனுடன் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் பெற்றோர் அவரை வீட்டில் சேர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்,வீட்டின் பின்புறம் உள்ள மோட்டோர் ரூம் போன்ற அறையில் தனது மகனுடன் மீனாட்சி தங்கியுள்ளார்.

இதையடுத்து, குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து அவரது 6 வயது மகன் ஜெயகாந்தை எரித்து கொலை செய்த பின்னர், தற்கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. தற்கொலை செயலில் ஈடுபட அச்சமடைந்ததால், அவரே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.இதனையடுத்து சிறுவனின் சடலத்தை மீட்ட போலீசார், மீனாட்சியை கைது செய்தனர்.

மகனைக் கொலை செய்து விட்டு, மாங்காடு சென்று கோவிலில் அவர் மொட்டை அடித்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மீனாட்சியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க