• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் தூய அன்னை சாரதா தேவியார் 166 ஆவது பிறந்த நாள் விழா

December 28, 2018 தண்டோரா குழு

கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் தூய அன்னை சாரதா தேவியார் 166 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

காலை மங்கள ஆரத்தியுடன் தொடங்கிய இந்த விழாவில் வித்யாலய மாணவர்களின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து வித்யாலய நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டனந்தர் விழாவில் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். அதனை தொடர்ந்து பல்வேறு நிறுவங்களின் மாணவர்கள் பங்குபெற்ற பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து கோவிலில் விசேஷ ஹோமம் நடைபெற்றது. இதில் வித்யாலய நிறுவனங்களின் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். அனைவரும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை பெண்கள் பங்கு பெற்ற சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபெற்றனர் . இதற்கான ஏற்பாடுகள் வித்யாலய நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டனந்தர் தலைமையில் செய்யப்பட்டது.

மேலும் படிக்க