• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி – உயிரிழப்பு 429 ஆக உயர்வு !

December 25, 2018 தண்டோரா குழு

இந்தோனேசியாவில் ஆழிப்பேரலையால் சுனாமி தாக்கி உயிரிழந்தவர்களின் என்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேஷியாவின் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள கிரகதோ எரிமலை வெடித்து சிதறியது. இதனைத் தொடர்ந்து கடலோர பகுதிகளை சுனாமி தாக்கியது.10 அடி உயரத்திற்கும் அதிகமாக சீறி பாய்ந்த அலைகள் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இந்த ஆழிப்பேரலை தெற்கு சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகள் இடையே சுந்த்ரா நீரிணையை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் உயிர் சேதத்தையும் பெரும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றது.

இதையடுத்து, இந்தோனேசியாவில் சுனாமி தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 429 ஆக அதிகரித்துள்ளது. 150 பேர் மாயமாகி உள்ளதாகவும் 16000 பேர் வேறு இடம் மாறியுள்ளதகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும் படிக்க