• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தந்தை இல்லாத ஏழைப் பெண்களுக்கு தந்தையாக இருந்து திருமணம் செய்து வைக்கும் வைர வியாபாரி

December 25, 2018 தண்டோரா குழு

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி தந்தையில்லாமலிருக்கும் ஏழைப் பெண்களுக்கு 2012-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 6 வருடங்களாகத் திருமணம் செய்து வைத்து வருகிறார்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மஹேஷ் சவானி. வைர வியாபாரியான மஹேஷ் சவானிக்கு 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்கு முன்பே மஹேஷ் சவானியின் தந்தை உயிரிழந்துள்ளார். தந்தை இல்லாமல் மஹேஷ் சவானியின் திருமணம் நடைப்பெற்றது. இதனால் குஜராத்தில் தந்தை இல்லாமல் ஆதரவுற்று உள்ள பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார்.

இதனையடுத்து 2012-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 6 வருடங்களாகத் தந்தையில்லாமலிருக்கும் ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் இந்த வருடம் நேற்றைக்கு முந்தைய தினம் 261 பெண்களுக்கு மஹேஷ் சவானியின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. சூரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மஹேஷ் ஒரு தந்தையாக இருந்து அனைத்து சடங்குகளையும் செய்தது பல பெண்களுக்கு கண்ணீரை வரவழைத்தது.
இதில் அந்தந்த மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களது மத முறைப்படி திருமணம் நடைபெற்றது. மொத்தம் 261 பேரில் ஒருவர் மாற்றுத்திறனாளி 2 பேர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள்.

திருமண நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி மற்றும் ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இதுவரையில் ஆறு ஆண்டுகளில் 1,300 பேருக்கு தொழிலதிபர் மஹேஷ் சவானி திருமணம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க