• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொலை செய்யப்பட்ட அமமுக பிரமுகர் ஜெயவேணு உடல் 35 நாட்களுக்கு பின் மீட்பு

December 25, 2018 தண்டோரா குழு

கோவையில் கொலை செய்யப்பட்ட அமமுக பிரமுகர் ஜெயவேணுவின் உடல் 35 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேணு. இவர் அமுமுக நகரச் செயலாளராக இருந்து வந்தார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக கோவை நீதிமன்றத்திற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். கடந்த அக்டோபர் 1ம் தேதி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைக்காக கோவைக்கு வந்துள்ளார். வந்தவர் மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பாத்தைத் தொடர்ந்து அவரது அண்ணன் ஜெய்சுரேஷ் மற்றும் உறவினர்கள் கோவைக்கு தேடி வந்துள்ளனர். இங்கு வந்து அவரது நண்பர்களிடன் விசாரித்தபோது மீண்டும் தூத்துக்குடிக்கே ஜெயவேணு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர். தொடர்ந்து எங்கு தேடியும் ஜெயவேணு கிடைக்கதாதால் மீண்டும் கோவைக்கு வந்து துடியலூர் காவல்நிலையில் ஜெயவேணுவின் மனைவி ஜெயதீபா புகார் அளித்தார்.

மேலும் அதில் தனக்கு ஜெயவேணுவின் நண்பர்களான ராஜேஷ் மற்றும் சுரேஷ் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனிடையே சுரேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து துடியலூர் போலீசார் தனிப்படை அமைத்து ராஜேசை கைது செய்தனர். விசாரணையில் ஜெயவேணுவுடன் ராஜேஷ் துடியலூர் அடுத்துள்ள வரப்பாளையம் பகுதியில் உள்ள அவர்களது நண்பரான சுரேஷ் வீட்டிற்கு சென்றதும், அங்கு மூவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெயவேணு ராஜேஷை கொலை செய்து, இருசக்கர வாகனத்தில் ஜெயவேணுவின் உடலை வைத்து கட்டி அருகில் உள்ள சண்முகம் என்பவரது தோட்டத்தில் உள்ள சுமார் 150 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றதாக தெரியவந்தது.
இதனையடுத்து கடந்த 21 தேதியில் இருந்து ஜெயவேணுவின் உடலை கிணற்றில் இருந்து எடுக்க காவல் துறையினர் முயன்று வந்தனர். அந்த பாழடைந்த கிணற்றில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்ததால் உடனடியாக எடுக்க முடியவில்லை. அதற்காக பொக்லைன் எந்திரம் மூலமும், ஆட்கள் மூலமும் குப்பைகளை அகற்றி வருகின்றனர். 10 டன்க்கும் மேல் குப்பையை அள்ளினர்.

இந்நிலையில், 35 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு எலும்பு கூடாக ஜெயவேணுவின் உடல் தென்பட்டது. தற்போது அவரது உடலை கிணற்றில் இருந்து எடுக்க தாசில்தார், அரசு மருத்துவமனை டீன் வந்துள்ளதால் உடனடியாக உடல் எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க