December 24, 2018
தண்டோரா குழு
அதிமுக தொண்டர்களிடம் பெறப்படும் மனுக்களை பரிசீலிக்க 5பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக ஆர். லட்சுமணன் எம்.பி.யும், கொள்கை பரப்பு துணை செயலாளராக பொன்னுசாமி, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலராக அமைச்சர் சி.வி. சண்முகம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலராக அசோக் குமார், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலராக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி,, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலராக சேவூர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலராக தூசி கே. மோகன் , அ.தி.மு.க. நிர்வாகிகள் , தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிய 5 பேர் கொண்ட மனுக்கள் குழுவை அ.தி.மு.க. அமைத்துள்ளது. இந்த குழுவில் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட 5 பேர் கொண்ட மனுக்கள் குழுவினர் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களை பெற்றுக்கொண்டு பரிசீலித்து நடவடிக்கை எடுப்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.