• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மனித – யானை மோதலுக்கு காரணமான கனிமவள கடத்தல்களை தடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

December 24, 2018 தண்டோரா குழு

கோவை தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் மனித யானை மோதலுக்கு காரணமான கனிம வள கடத்தல்களை தடுக்க கோரி, வனம் யானைகளின் வாழ்விடம் என்ற போஸ்டர்களுடன் வந்து சமூக நீதிக்கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் விளைநிலங்களை சேதப்படுத்துவதாக விநாயகன், சின்னத்தம்பி என அழைக்கப்படும் இரண்டு காட்டு யானைகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினர். விநாயகன் என்ற யானை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, முதுமலை வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டுள்ளனர். மேலும் சின்னத்தம்பி யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், யானை – மனித மோதலுக்கு காரணமான சட்ட விரோதமாக கனிம வளக் கடத்தல்களை தடுக்க கோரியும், சமூக நீதிக்கட்சியினர் வனம் யானைகளின் வாழ்விடம் என்ற போஸ்டர்களுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். மேலும், கனிம வளக்கடத்தல்களால் யானைகளின் வாழ்விடமும், வலசை பாதையும் பாதிக்கப்படுவதாக கூறிய அக்கட்சியினர், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

மேலும் படிக்க