• Download mobile app
01 Sep 2026, TuesdayEdition - 3856
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூரில் கே.பி.என். பஸ்களுக்கு தீ வைத்த 7 பேர் கைது

September 15, 2016 தண்டோரா குழு

பெங்களூரில் கடந்த திங்கட்கிழமை கன்னடர்கள் நடத்திய வன்முறையின் போது டீசவுசா நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கே.பி.என். நிறுவனத்துக்கு சொந்தமான 42 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பெங்களூரில் உள்ள 9 தீயணைப்பு வண்டிகள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தன. அதற்கு காரணமான ஏழு பேர் பெங்களூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 42 பஸ்கள் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக கே.பி.என். நிறுவன டிரைவர்களில் ஒருவரான வெங்கடாசலம் என்பவர் பெங்களூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கன்னட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக முதலில் கூறப்பட்டதால், தீ வைத்தது யார் என்பதை கண்டுபிடிப்பது பெரும் சவாலாக இருந்தது. கடந்த 2 நாட்களாக காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணைக்குப் பிறகு தீ வைத்த குற்றவாளிகளை அவர்கள் கண்டுபித்தனர்.

டீசவுசா நகர் மற்றும் வீரபத்ரா நகரைச் சேர்ந்த ரக்ஷித்(19), சதீஷ்(27), கிரண்(27), கெம்பேகவுடா(28), பிரகாஷ்(46), லோகேஸ்(25), சந்தன்(19) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 143(சட்ட விரோதமாக கூடுதல்), 147 (கலவரம் செய்தல்), 427 (சேதம் விளைவித்தல்), 324 (பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்),435 (தீ வைத்து எரித்து பெரிய இழப்பு ஏற்படுத்துதல்) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கைதான 7 பேரும் நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் நடத்திய வன்முறையில் கே.பி.என். நிறுவனத்துக்கு சுமார் 50 கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் கடந்த 2 நாட்களாக நடந்த கணக்கெடுப்புக்குப் பிறகு சுமார் 12 கோடி முதல் 14 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. தீ வைத்து எரிக்கப்பட்ட 42 பஸ்களில் பெரும்பாலானவை நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. அந்த இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக எரிக்கப்பட்ட 42 பஸ்களையும் ஆய்வு செய்தனர்.

கே.பி.என். நிறுவனம் தினமும் பெங்களூருக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 80 பஸ்களை இயக்கி வந்தது. அதில் பாதி பஸ்கள் எரிக்கப்பட்டுவிட்டன மீதி பஸ்கள் தமிழக பகுதிகளில் பத்திரமாக உள்ளன.பெங்களூரில் முழுமையாக இயல்பு நிலை திரும்பும் வரை எந்த பஸ்சும் இயக்கப்படமாட்டாது. மேலும், ரத்து செய்யப்பட்ட பஸ்களில் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்பட்டு வருவதாகவும் கே.பி.என். நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராஜேஸ் தெரிவித்தார்.

மேலும் படிக்க