• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்த காவல்துறை அதிகாரிகள் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள் – எச்.ராஜா

December 22, 2018 தண்டோரா குழு

பொன்.மாணிக்கவேல் நேர்மையானவரா என்று கேள்வி கேட்பவர்களின் நேர்மை மக்களிடம் கேள்விக்குட்படுத்தப்படும் என பொன்.மாணிக்கவேல் குறித்து சட்டத்துறை அமைச்சர் சண்முகத்தின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்தார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 140க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டவர் நேர்மையானவரா என்பது குறித்து மக்களிடம் தான் கேட்க வேண்டும். பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்த காவல்துறை அதிகாரிகள் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள். புகார் அளித்த காவல்துறை அதிகாரிகளின் பொருளாதாரத்தை சோதனை செய்ய வேண்டும்.

கோவை மாதம்பட்டியில் பூஜைகள் நடைபெறாமல் உள்ள ஒரு கோவிலை 2015லிருந்து புனரமைக்க அப்பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத்துறையிடம் மனு கொடுத்து காத்திருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை கைவிடப்படுவதே சிலைகளை திருடுவதற்கு தான்.

அரியலூர் சுத்தமள்ளி ஊரில் உள்ள நடராஜர் , சிவகாமி ஆகிய இரு சிலைகள் நியூயார்க்கில் உள்ளது எப்படி சென்றது? அங்குள்ள சிவன் கோவிலில் உள்ள 10 சிலைகள், அருகிலுள்ள பெருமாள் கோவிலில் இருந்த 8 சிலைகள் 45 ஆண்டுகளாக பூஜை செய்யாமல், பூட்டப்பட்ட நிலையில், 2007 ல் இந்து சமய அறநிலையத்துறை கோவிலை திறந்து புகைப்படம் எடுத்த அடுத்த ஒரு வாரத்தில் கோவிலில் கொள்ளை நடந்து 18 சிலைகள் திருடப்பட்டு நியூயார்க் சென்றுள்ளது.அந்த வழக்கில் தான் ஜெர்மனியில் இருந்த சுபாஷ் கபூர், தீனதயாளான், சஞ்சீவி அசோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோவிலில் 300 கோடிக்கும் மேற்பட்ட சிலைகள் காப்பக்கத்தில் இருந்த சிலைகளை போலி செய்த வழக்கில் அதிகாரி கஜேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அறநிலையத்துறையினர் போராட்டம் நடத்தினால் மொத்த துறையையும் ஊழல் நிறைந்தது என்பது தானே அர்த்தம் என்று சாடியவர், கவிதா, திருமகள் சிலை திருடர்கள் என்பதை ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டதால் தான் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டவர், 50 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் இவ்வளவு சிலைகள் கடத்தப்பட்டது அவமானம் என்பதால், அதை மீட்பவரை
ஊக்கம் கொடுக்க வேண்டுமே தவிர சந்தேகப்படக்கூடாது என்றார்.

முன்னதாக பேசிய அவர், மக்களுக்கு பாதுகாப்பான உணர்வை தரக்கூடியது இராணுவத்தினரை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி என்றும், 40 ஆண்டுகளாக போராடி வந்த ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு தீர்த்து வைத்ததாகவும், உலக யோகா தினம் கொண்டாடப்படுவதற்கு, அமெரிக்க எச்சரிக்கையை மீறியும் ஈரான், ஐக்கிய அரேப் எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடன் உள்ளூர் பணத்தில் வர்த்தகம் செய்யப்படுவது இந்தியாவிற்கு தற்போது உலக அளவில் மரியாதை உள்ளதாக தெரிவித்தார். உலக அளவில் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெரும் நாடாக இந்தியா உள்ளதற்கு ஜி.டி.பி. 7.3% என்பதை சுட்டிக்காட்டியவர், அன்னிய நாட்டின் அச்சுறுத்தலை எதிர்க்கொள்ளும் வகையில் நம் இராணுவம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க