• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

December 21, 2018 தண்டோரா குழு

கோவை உணவு பாதுகாப்பு துறை சார்பில் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் உள்ள இந்திய வர்த்தக சபையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவையில் உள்ள தொழில்துறையை சேர்ந்தவர்கள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொழில் நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அதற்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவதும் குறித்தும் இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக பிளாஸ்டிக் தடை குறித்து உள்ள அச்சமும், சந்தேகங்கள் தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். குறிப்பாக அனைத்து தொழில் நிறுவனங்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, மாற்று பொருட்களை உடனடியாக பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உள்ள பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது எனவும், இதற்காக தண்டனை சட்டத்தை உடனடியாகா அமல்படுத்தாமல் சிறிது காலம் அவகாசம் அளித்து, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தொழில் துறையினர் இந்த கூட்டத்தில் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க