• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி – ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

December 19, 2018 தண்டோரா குழு

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்துவந்தது. இதில்,மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முஃப்தி முதல்வராக ஆட்சி செய்து வந்தார்.இதற்கிடையில், காஷ்மீரில் நிலவும் சூழல் காரணமாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும், பயங்கரவாதம், வன்முறை, பத்திரிகையாளர் சுடப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகள் கூட்டணியை பாதித்தன. இதனால், ஜம்மு – காஷ்மீர் அரசுக்கு பா.ஜ.க அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது. இதனால், அம்மாநிலத்தில் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. பின்னர்மெகபூபா முஃப்தி பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார். இதனையடுத்து ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 6 மாதங்களாக ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது. அந்த ஆட்சி இன்றுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, நாளை முதல் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக் பரிந்துரை செய்திருந்தார்.இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர்.தனது பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் உத்தரவில் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்.ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

மேலும் படிக்க