• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஈச்சனாரியில் பள்ளி வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

December 19, 2018 தண்டோரா குழு

கோவை ஈச்சனாரியில் பள்ளி வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்தனர்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் ஈச்சனாரியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.இதனால் பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் மதுக்கரை வழியாக மாற்றுப்பதையில் சென்றுகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று காலை ஈச்சனாரியில் தனியார் பள்ளி வாகனத்தின் மீது மேட்டுபாளையத்தில் இருந்து பொள்ளாச்சி சென்ற தனியார் பேருந்து மோதியதில் அருகிலிருந்த இருசக்கரவாகனங்கள் மீது இரு பேருந்துகளும் மோதின இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். மற்றோரு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் சிறிய காயங்களுடன் தப்பித்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில்,பாலம் கட்ட ஆரம்பித்ததிலிருந்து இருந்தே அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாகவும் இது போன்ற விபத்துகளுக்கு காரணம் வாகன ஓட்டிகள் முறையாக சாலை விதிகளை கடைபிடிக்கமால் இருப்பதேயாகும் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் படிக்க