• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி – முதல்வர் கமல்நாத் அறிவிப்பு

December 17, 2018 தண்டோரா குழு

முதல்வராக பதவியேற்றபின் கமல்நாத் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்து கோப்பில் கையெழுத்துவிட்டார்.

நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் மத்தியபிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. இதற்கிடையில், மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, போபாலின் பெல் பகுதியில் உள்ள ஜம்பூரி மைதானத்தில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், முதல்வராக பதவியேற்றபின் கமல்நாத் முதல் கையெழுத்தாக மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்து கோப்பில் கையெழுத்திட்டார். விவசாயிகள் கடன் தள்ளபடி செய்யப்படும் என தேர்தலின்போது கமல்நாத் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க