December 15, 2018
தண்டோரா குழு
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு 89% பேர் ஆதரவாக உள்ளனர் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
ஒட்டுமொத்த மக்களின் நலன் கருதியே பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது.சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு 11% பேர் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 89% பேர் ஆதரவாக உள்ளனர். யாரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை.
இந்தியாவிலேயே 2-வது பசுமை வழிச்சாலை தமிழகத்தில் அமைய வாய்ப்பு கிடைத்துள்ளது. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும் என்றார்.