• Download mobile app
01 Sep 2026, TuesdayEdition - 3856
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்

September 14, 2016 தண்டோரா குழு

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசரை நியமித்து காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜனார்த்தன துவிவேதி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த ஜூன் 25ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். மூன்று மாதங்களை கடந்தும் புதிய தலைவர் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன துவிவேதி டெல்லியில் இன்று அறிவித்துள்ளார்.

பின்னர், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், காங்கிரஸ் கமிட்டி தலைவராக என்னை நியமித்த சோனியா காந்திக்கும், ராகுலுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றும் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மேலிடத்தில் ஆலோசனை செய்து முடிவெடுப்பேன் என்றார்.

மேலும், இனி கட்சியில் கோஷ்டி பூசல்கள் இருக்காது எனக் கூறிய அவர் கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும். காவிரி பிரச்சினையில் தமிழர்கள் நிதானம் இழக்கக் கூடாது’ எனக் கூறினார்.

மேலும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த விஜயதரணி,பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலரும் திருநாவுக்கரசரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்ததை வரவேற்றுள்ளனர்.

திருநாவுக்கரசர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அதிமுகவில் இணைந்து தனது அரசியல் வாழ்வை துவங்கினார். பின்னர் பாஜகவில் இணைந்த அவர் பாஜக ஆட்சியில் மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். பின்னர் 2012ல் காங்கிரஸ்சில் இணைந்த அவர் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் சேரும் முன் பாஜகவில் கட்சியின் உறுப்பினராக இருந்த காரணத்தால் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திருநாவுக்கரசை தலைவராக நியமிக்கக்கூடாது என்று கடந்த ஜூலை மாதம் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க