December 14, 2018
தண்டோரா குழு
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழ்நாடு, பெங்களூர், ஐதராபாத், புதுச்சேரி என 187 இடங்களில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
எனினும், சோதனை பற்றிய விவரங்கள் வரவில்லை. இந்நிலையில், வருமான வரிசோதனை தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடல் விசாரணை நடத்த சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து, பெங்களூர்பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிக்கலாவிடம் ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் ஒரு பெண் உள்பட 5 பேர் கொண்ட குழு நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்
இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் விசாரணையை தொடங்கினர்.