• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ மீண்டும் விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்திரவு

December 13, 2018 தண்டோரா குழு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓமலூர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த விஷ்ணுப்பிரியா, அதே ஆண்டு, நவம்பர் மாதம் 25ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார்கள் எழுந்த நிலையில், குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.

இதை எதிர்த்து விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவிக்குமார் தொடர்ந்த ஆட்சேபனை மனுவை விசாரித்த கோயம்புத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜ் இன்று தீர்ப்பளித்தார். அதில்,மே மாதம் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையை தள்ளுபடி செய்வதாகவும் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க