• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ மீண்டும் விசாரிக்க கோவை நீதிமன்றம் உத்திரவு

December 13, 2018 தண்டோரா குழு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓமலூர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த விஷ்ணுப்பிரியா, அதே ஆண்டு, நவம்பர் மாதம் 25ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார்கள் எழுந்த நிலையில், குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.

இதை எதிர்த்து விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவிக்குமார் தொடர்ந்த ஆட்சேபனை மனுவை விசாரித்த கோயம்புத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜ் இன்று தீர்ப்பளித்தார். அதில்,மே மாதம் சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையை தள்ளுபடி செய்வதாகவும் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க