• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெலுங்கானா மாநில முதல்வராக 2-வது முறையாக சந்திரசேகர ராவ் பதவியேற்பு !

December 13, 2018 தண்டோரா குழு

தெலுங்கானா மாநில முதல்வராக 2-வது முறையாக சந்திரசேகர ராவ் பதவியேற்றார்.

தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.

119 சட்டசபை தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதில், சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 88 தொகுதிகளில்வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.இந்நிலையில், தெலுங்கானா மாநில முதல்வராக 2-வது முறையாக சந்திரசேகர ராவ் இன்று பதவியேற்றார். அவருக்கு தெலுங்கானா ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் படிக்க