• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தோல்வியில் எப்படி வெற்றியை தமிழிசை பார்க்கிறார் என தெரியவில்லை – குஷ்பூ

December 11, 2018 தண்டோரா குழு

தோல்வியில் எப்படி வெற்றியை தமிழிசை பார்க்கிறார் என தெரியவில்லை என நடிகை குஷ்பூ கூறியுள்ளார்.

தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று உள்ளது. மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதற்கிடையில், ‘இன்றை சட்டமன்ற தேர்தல் மூடிவுகளால் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதில் எவ்வித பாதிப்பும் எங்களுக்கு ஏற்ப்படுத்தபோவதில்லை, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் மிக குறைவான வாக்கு விதிசாயத்திலேயே பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது, எனவே இதை வெற்றிகரமான தோல்வி என்றுதான் சொல்ல முடியும்’ தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருந்தார்.

இந்நிலையில், 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் இது மக்களின் வெற்றி என குஷ்பு கூறியுள்ளார். மேலும் தோல்வியில் எப்படி வெற்றியை தமிழிசை பார்க்கிறார் என தெரியவில்லை என்று கூறிய குஷ்பு, 2019ல் மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க