• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

December 11, 2018 தண்டோரா குழு

சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

பிரபல தமிழ் எழுத்தாளர், நாவல் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சஞ்சாரம் என்ற நாவலுக்கு 2018ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. இதற்காக அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திரைப்படத்திலும் தனது பங்களிப்பை செய்திருக்கிறார். ஆல்பம், சண்டக்கோழி, அவன் இவன், சமர், சண்டக்கோழி 2, இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அதைபோல், ராமகிருஷ்ணன் முதலில் வசனம் எழுதியது ரஜினி நடித்த பாபா படத்திற்கு தான். அன்று இவர் ரஜினியின் நண்பராக இருந்து வருகிறார். ரஜினி அடிக்கடி சந்தித்து பேசுவர்களில் ஒருவராக ராமகிருஷ்ணன் இருக்கிறார்.

இந்நிலையில்,ராம கிருஷ்ணன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.அப்போது தனது நண்பனை ரஜினி அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார். அவருக்கு எஸ்.ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது பெற்ற சஞ்சாரம் நாவலை பரிசாக வழங்கினார்.

மேலும் படிக்க