December 11, 2018 தண்டோரா குழு
அமெரிக்காவில் பசி கொடுமையால் நாய் ஓன்று தன் காலையே கடித்து தின்றுள்ளது.
அமெரிக்க தெற்கு கரோலினா மாகாணத்தில் நோவா ஆர்க் மீட்பு குழுவினருக்கு இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில் லூக் என்ற நாய் பசியால் இறக்கும் நிலைக்கு ஆளானதாக கூறப்பட்டது. இதையடுத்து விலங்குகள் நல வாரியக் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு ஏராளமான நாய்கள் இருந்தன அதில் லூக் என்ற நாய் பல நாட்களாக உணவின்றி தவித்து வந்துள்ளதும் பசிக் கொடுமையால் தனது காலையே கடித்து தின்றுள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து, உடனடியாக நாயை மீட்டு உணவு அளித்து பராமரித்து வருகின்றனர். லூக்கின் உரிமையாளர் போதிய உணவு அளிக்கவில்லை நிச்சயம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.
லூக்கிற்கு சிகிச்சை அளித்த பின் மருத்துவர்கள் கூறுகையில்,
நாயின் உதட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. சுவாசப் பாதையில் இருந்த பிரச்சனையும் தீர்ந்து வருகிறது. தொடர்ந்து மருத்துவக் குழுவினர் லூக்கை கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர்.