• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிலோ ஒரு ரூபாய்க்கு 2,657 கிலோ வெங்காயம் விற்பனை – விவசாயி வேதனை

December 10, 2018 தண்டோரா குழு

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2657 கிலோ வெங்காயம் விற்றதில் 6 ரூபாய் மட்டுமே லாபம் ஈட்டியதால் விவசாயி அந்தப்பணத்தை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு அனுப்பி வைத்தார்.

கடந்த சில திங்களாகவே வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயகள் கடும் வேதனையில் உள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா அகமத் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷ்ரேயாஸ் அபாலே என்ற விவசாயி தன் தோட்டத்தில் விளைவித்த 2 ஆயிரத்து 657 கிலோ வெங்காயத்தை விற்க சங்கம் நெர் நகரில் உள்ள சந்தைக்கு கொண்டு சென்றார்.

அங்கு கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் 9 காசுகளுக்கு மட்டுமே வெங்காயம் விலை போயுள்ளது. இதன் முலம் அவருக்கு 2 ஆயிரத்து 916 ரூபாய் கிடைத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாய் கிடைத்த பணத்தை வைத்து போக்குவரத்துச் செலவு, மூட்டைகளை தூக்கிச் சென்றவர்களுக்கு கூடுத்த கூலி போக மிச்சம் உள்ள 6 ரூபாயை முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் படிக்க