• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமமுக பிரமுகர் ஜெயவேணுவின் உடலை கிணற்றில் இருந்து எடுக்க முடியாமல் போலீஸ் திணறல்

December 8, 2018 தண்டோரா குழு

கோவை அருகே கொலை செய்யப்பட்ட அமமுக பிரமுகர் ஜெயவேணுவின் உடலை கிணற்றில் இருந்து எடுக்க முடியாமல் 15 நாட்களுக்கு மேலாக துடியலூர் போலீசார் திணறி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேணு. இவர் அமுமுக நகரச் செயலாளராக இருந்து வந்தார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக கோவை நீதிமன்றத்திற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். கடந்த அக்டோபர் 1ம் தேதி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைக்காக கோவைக்கு வந்துள்ளார். வந்தவர் மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பாததைத் தொடர்ந்து அவரது அண்ணன் ஜெய்சுரேஷ் மற்றும் உறவினர்கள் கோவைக்கு தேடி வந்துள்ளனர். இங்கு வந்து அவரது நண்பர்களிடன் விசாரித்தபோது மீண்டும் தூத்துக்குடிக்கே ஜெயவேணு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர். தொடர்ந்து எங்கு தேடியும் ஜெயவேணு கிடைக்கதாதால் மீண்டும் கோவைக்கு வந்து துடியலூர் காவல் நிலையத்தில் ஜெயவேணுவின் மனைவி ஜெயதீபா புகார் அளித்தார்.

மேலும் அதில் தனக்கு ஜெயவேணுவின் நண்பர்களான ராஜேஷ் மற்றும் சுரேஷ் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனிடையே சுரேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து துடியலூர் போலீசார் தனிப்படை அமைத்து ராஜேசை கைது செய்தனர். விசாரணையில் ஜெயவேணுவுடன், ராஜேஷ் துடியலூர் அடுத்துள்ள வரப்பாளையம் பகுதியில் உள்ள அவர்களது நண்பரான சுரேஷ் வீட்டிற்கு சென்றதும், அங்கு மூவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெயவேணு ராஜேஷை கொலை செய்து, இருசக்கர வாகனத்தில் ஜெயவேணுவின் உடலை வைத்து கட்டி அருகில் உள்ள சண்முகம் என்பவரது தோட்டத்தில் உள்ள சுமார் 150 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு சென்றதாக தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த 21 தேதியில் இருந்து ஜெயவேணுவின் உடலை தோண்டி எடுக்க காவல் துறையினர் முயன்று வருகின்றனர். ஆனால் இது வரை உடலை எடுக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வருகின்றனர்.

மேலும் படிக்க