• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உதகையில் உள்ள மத்திய உருளை ஆய்வு மையத்தை மூடக்கூடாது பிரதமருக்கு முதல்வர் கடிதம்

December 6, 2018 தண்டோரா குழு

உதகமண்டலத்தில் உருளைக்கிழங்கு ஆய்வு நிலையத்தை மூடக்கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

ஊட்டியில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தை மத்திய அரசு மூடக்கூடாது.மையத்தை மூடாமல் உருளைக்கிழங்கு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.1957 ல் துவங்கப்பட்ட இந்த மையம்,70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தை மூடினால், தென் மாநில விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். தென் மாநில விவசாயிகள் பஞ்சாபில் உள்ள ஆய்வு மையத்தை நாடும் சூழ்நிலை உருவாகும்.இந்த ஆய்வு மையத்தை மூடினால் உதகை,கிருஷ்ணகிரி,ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.வட மாநில ஆய்வு மையம் உருவாக்கும் ரகங்கள் இங்கு பயன்தராது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க