• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை – உமா பாரதி அறிவிப்பு!

December 4, 2018 தண்டோரா குழு

பாஜக மூத்த தலைவரும், மத்திய குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு துறை அமைச்சருமான உமாபாரதி, வரும் 2019-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், கஜுரஹோ லோக்சபா தொகுதியில்1989ம் ஆண்டு, வெற்றி பெற்று எம்.பியான உமா பாரதி, 1991, 1996 மற்றும் 1998ம் ஆண்டுகளிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்று அசத்தினார். அத்வானியுடன், இணைந்து ராம ஜென்ம பூமி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டபோது, தீவிர இந்துத்துவாவாதியான, உமா பாரதி தேசிய அளவில் முக்கிய தலைவராக மாறினார்.
இதையடுத்து, நரேந்திர மோடி அரசில், 2017 செப்டம்பர் 1ம் தேதிவரை நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த உமா பாரதி, பிறகு குடிநீர் மற்றும் கழிவகற்றல் துறைக்கான அமைச்சரானார். இந்நிலையில், உமாபாரதி, வரும் 2019-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.

எனினும், ராம ஜென்ம பூமிக்காக தனது போராட்டம் தொடரும் என்றும் இன்று உமா பாரதி அறிவித்துள்ளார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தொடர்ந்து போராட உள்ளதாவும் கங்கை நதியினை தூய்மை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். உமா பாரதி, தனது தேர்தல் விலகளுக்கு காரணமும் இதுதான் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க