December 4, 2018
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் பன்றி காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அதைபோல் சூலூரை அடுத்த அப்பநாயக்கம்பட்டியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 1ஆம் தேதி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமியை சேர்த்தனர். 2 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.
தற்போது பன்றிக் காய்ச்சலுக்கு 23 பேருக்கும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கும், காய்ச்சலுக்கு 63 பேருக்கும் என மொத்தம் 90 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.