• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

December 4, 2018 தண்டோரா குழு

மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து திமுக தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு மட்டுமின்றி பல்வேறு எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து திமுக சார்பில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் டிசம்பர்4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, மேகதாது அணை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திமுக-வின் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்தியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

ஸ்டாலினுடன், திருநாவுக்கரசர், திருமாவளவன், காதர்மொய்தீன் உள்ளிட்ட தலைவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும் படிக்க