• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயல் நிவாரணம் தந்த சிறுமிக்கு சைக்கிள் வழங்கி முதலமைச்சர் பாராட்டு

December 3, 2018 தண்டோரா குழு

கஜா புயல் நிவாரண நிதிக்காக தான் சேமித்து வைத்த பணத்தை கொடுத்த சிறுமியை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சைக்கிளை பரிசாக வழங்கினார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளானதால் மக்களின் இயல்பு நிலை மாறியுள்ளது. தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தேவையான பொருட்களையும், நிதிஉதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகள் அக்சயாஸ்ரீ. இவர் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வருவதற்காக சைக்கிள் வாங்க அவர் சேமித்து வைத்த 520 ரூபாயை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்தார். இதனையறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவி அக்சயாஸ்ரீயை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சிறுமிக்கு புதிய மிதிவண்டி ஒன்றை பரிசாக வழங்கினார்.

மேலும் படிக்க