• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் – இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு

December 3, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் 20 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளித்து, வாக்கு சேகரிக்க உள்ளதாக கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி இதனைத் தெரிவித்தார். அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும், இதனால் வருகிற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க