• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காங்.,க்கு தான் இந்து மதம் பற்றி ஒன்றும் தெரியாது ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி

December 3, 2018 தண்டோரா குழு

இந்துத்துவா பற்றி ரிஷிகள் மற்றும் முனிவர்களுக்கு கூட முழுமையான அறிவு இருந்ததில்லை என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசார சூடுபிடித்துள்ளது. அண்மையில் அங்கு நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்துத்துவாவின் சாராம்சம் என்ன என்பது எனக்கு ஆர்வத்தினை தூண்டும் வகையில் உள்ளது. தயவு செய்து இந்துத்துவாவை பற்றி நீங்கள் படியுங்கள். கீதை சொல்வது என்ன? ஒவ்வொருவரிடமும் அறிவு உள்ளது. உங்களை சுற்றி அறிவு உள்ளது. நம்முடைய பிரதமர் தன்னை இந்து என கூறி கொள்கிறார். இந்துத்துவாவின் அடிப்படையை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை என பேசினார். இந்நிலையில் ஜோத்பூரில் இறுதி கட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

காங்.,க்கு வளர்ச்சியில் நம்பிக்கையில்லை. பொய்களை பரப்பி ஓட்டுக்களை பெற்று விடலாம் என நினைக்கிறது. வளர்ச்சிக்கான விவகாரத்தின் அடிப்படையில் மக்கள் வாக்களிக்க போகிறார்களா? அல்லது எனது மத அடையாளம் பற்றி கேள்வி எழுப்புபவர்களுக்கு வாக்களிக்க போகிறார்களா? என வாக்காளர்கள் முடிவு செய்வர். மோடிக்கு இந்துத்துவா பற்றிய அறிவு இல்லை என தேர்தல் பிரசாரங்களில் அவர்கள் கூறி வருகின்றனர். ராஜஸ்தானின் மக்கள், மோடிக்கு இந்துத்துவா பற்றிய அறிவு இருக்கா அல்லது இல்லையா? என்பதற்காக வாக்களிக்க போகிறார்களா? அவர்கள் மின்சாரம், நீர் மற்றும் சாலை ஆகிய விவகாரங்களுக்காக வாக்களிக்க விரும்புகின்றனர்.

இந்து மதம் மற்றும் இந்துத்துவா ஆகியவை பழமையான விசயங்கள். அவை அறிவு மற்றும் கலாசார வளம் நிறைந்த விசயங்கள். அதன் முழு விசயங்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் காங்.,க்கு தான் இந்து மதம் பற்றி ஒன்றும் தெரியாது. மக்களுக்காக பணியாற்றாமல் தேர்தலில் வெற்றி பெற காங்., நினைக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரசால் எங்களை வெல்ல முடியாது என பேசியுள்ளார்.

மேலும் படிக்க