November 30, 2018
தண்டோரா குழு
காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில செயல் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலங்கானாவில் டிசம்பர் 7ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.மாநிலத்தில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.இதையடுத்து,வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பணியாற்றி வரும் காங்கிரஸ் கட்சி,தற்போது அம்மாநிலத்திற்கான நிர்வாகிகளை அறிவித்துள்ளது.அந்தப் பட்டியலில் முகமது அசாருதீனுக்கு செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அசாருதீன்,2009 லோக்சபா தேர்தலில் உ.பி.,யில் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.2014 தேர்தலில்,ராஜஸ்தானின் டோங்க்-சவாய் மாதோபூர் தொகுதியில் தோல்வியடைந்தார்.அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் அவர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.