• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏழு பேர் விடுதலை குறித்து நடிகர் விஜய் சேதுபதி,இயக்குநர் ராம் டுவீட் !

November 30, 2018 தண்டோரா குழு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை சென்றுள்ள ஏழு பேர் விடுதலை குறித்து நடிகர் விஜய் சேதுபதி ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன்,சாந்தன்,நளினி,முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவுசெய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூட்டப்பட்டது.அதில் ராஜீவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிக்க முடிவெடுத்து அதை தீர்மானமாக ஆளுநருக்குப் பரிந்துரை செய்து தமிழக அரசு அனுப்பியது.தற்போது ஆளுநரின் முடிவிற்காக தமிழக அரசு காத்துக்கொண்டிருகிறது.

இதற்கிடையில்,ஏழு பேரும் சிறை சென்று இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிறது.இதையடுத்து #28YearsEnoughGovernor என்ற ஹேஷ்டேக்கின் கீழ்,அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி பலரும் வேண்டுகோள் விடுத்து இதனை ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.அதைபோல் தமிழக அரசு பரிந்துரை வழங்கியும் ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆளுநருக்கு கோரிகைகள் வந்து கொண்டே இருக்கிறன்றது. இந்நிலையில்,ஏழு பேர் விடுதலை குறித்து நடிகர் விஜய் சேதுபதி ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

ஏழுபேர் விடுதலை என்பது தமிழர்களின் பிரச்சனை மட்டுமல்ல.இது ஒரு மனித உரிமை பிரச்சனை.இத்தனை வருடங்கள் அவர்களை சிறையில் அடைத்து வைத்திருந்ததே போதும்.அவர்களின் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதைபோல் இயக்குநர் ராம் தனது டுவிட்டர் பக்கத்தில்,

திறக்கட்டும் கதவுகள்.கவர்னரை சென்றடையும் வரை பதிவுகள் இடுவோம் என்று குறிபிட்டுள்ளார்.

மேலும் படிக்க