• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிலை கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து உயர் நீதிமன்றம் அதிரடி

November 30, 2018 தண்டோரா குழு

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ததுடன் இன்று ஓய்வு பெற இருந்த பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து அவரது பணியை ஒராண்டுக்கு உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக கோவில்களில் சாமி சிலைகள் கடத்தப்பட்ட வழக்குகளை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் விசாரித்து வந்தார்.சிலை கடத்தல் விவகாரத்தில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டியது இருப்பதால்,சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டது.இதை எதிர்த்து யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில்,பொன்.மாணிக்க வேல் இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.இதையடுத்து,அவர் வகித்த ஐ.ஜி. பதவி ஏடிஜிபியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டு அபய்குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதற்கிடையே சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றும் வழக்கு தொடர்பாக தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது.அதன்படி, இன்று பிற்பகலில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தது.சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை சட்ட விரோதம் என்று கூறிய நீதிபதிகள் அதனை ரத்து செய்தனர்.பொன் மாணிக்கவேலை அடுத்த ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு அப்படியே பணியாற்றும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.அதைபோல் அவருக்கு முன்னர் வழங்கிய ஊதியத்தை தமிழக அரசு அப்படியே வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும்,அவருக்கு மாநில போலீசும்,சிபிஐயும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.விசாரணை தொடர்பான அறிக்கையை வேறு எந்தஒரு அதிகாரியிடமும் அவர் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.அவர் நேரடியாகவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.அவரை சிறப்பு அதிகாரியாக ஓராண்டு நியமனம் செய்வதற்கு தேவையான பணியை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க