• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அருகே ஊருக்குள் சுற்றித்திரிந்த காட்டு யானைகள்

November 30, 2018 தண்டோரா குழு

கோவையை அடுத்த துடியலூர் பகுதியில் இரவு குடியிருப்புக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள் உலா வந்தது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கியும்,பயர்களை சேதப்படுத்தியும் வருகிறது. இந்நிலையில் கோவையை அடுத்த துடியலூர் பகுதியில் நேற்று இரவில் ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் வீட்டிற்கு முன்னாள் வைக்கப்பட்டு இருந்த செடிகளை சாப்பிட்டது.இதனால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

இரு யானைகளும் தொடர்ந்த பல மணி நேரமாக ஊருக்குள் உலா வந்தது.தொடர்ந்து காட்டு யானைகள் இவ்வாறு ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர முடியாத சூழல் உருவாகி உள்ளது.ஏற்கெனவே காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகளை கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கும் சூழலில்,அதையும் மீறி இந்த காட்டு யானைகள் ஊருக்குள் நுழைகின்றது.இதனால் உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க