• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினி படம் வெளியாவதையொட்டி கோவையில் விடுமுறை அறிவித்த தனியார் நிறுவனம்

November 29, 2018 தண்டோரா குழு

ரஜினி 2.0 படம் இன்று வெளியாவதால்,கோவையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2.O திரைப்படம் வெளியாகி உள்ள சூழலில் ரசிகர்கள் உற்சாகமாக படத்தை ரசித்து வருகின்றனர்.இயக்குநர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு இன்று வெளியாகியுள்ள 2.O திரைப்படம் கோவையில் சுமார் 60 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது.ரசிகர்கள் படத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினி படம் வெளியாவதையொட்டி கோவையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.சுமார் 3௦ க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் அந்த நிறுவனத்தில் ரஜினி படம் வெளியாகும் போது விடுப்பு அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.இதனால் கோவை சித்தாபுதூர் பகுதியில் அமைந்து உள்ள அந்த நிறுவனத்தில்,இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.மேலும் அந்த நிறுவனத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் இலவச டிக்கெட்டுகளும் அளித்து அனைவரும் படம் பார்க்கும் வகையில் ஏற்பாடும் செய்துள்ளனர்.

மேலும் படிக்க