November 29, 2018
தண்டோரா குழு
ரஜினி 2.0 படம் இன்று வெளியாவதால்,கோவையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2.O திரைப்படம் வெளியாகி உள்ள சூழலில் ரசிகர்கள் உற்சாகமாக படத்தை ரசித்து வருகின்றனர்.இயக்குநர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு இன்று வெளியாகியுள்ள 2.O திரைப்படம் கோவையில் சுமார் 60 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது.ரசிகர்கள் படத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினி படம் வெளியாவதையொட்டி கோவையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.சுமார் 3௦ க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் அந்த நிறுவனத்தில் ரஜினி படம் வெளியாகும் போது விடுப்பு அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.இதனால் கோவை சித்தாபுதூர் பகுதியில் அமைந்து உள்ள அந்த நிறுவனத்தில்,இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.மேலும் அந்த நிறுவனத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் இலவச டிக்கெட்டுகளும் அளித்து அனைவரும் படம் பார்க்கும் வகையில் ஏற்பாடும் செய்துள்ளனர்.