• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏ.சி.சி சிமெண்ட் சார்பில் 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்!

November 28, 2018 தண்டோரா குழு

கஜா புயலால் பாதிக்கபட்டவர்களுக்கு ஏ.சி.சி சிமெண்ட் சார்பில் 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கஜா புயலின் கோர தாண்டவத்தால் கடும் சேதங்களை சந்தித்து.கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாகை, திருவாரூர்,தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதன்படி தனியார்,அரசு சாரா நிறுவனங்கள்,தனிநபர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த உதவிகளை தமிழக அரசின் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவி வருகிறார்கள்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்டத்திற்கு கோவை மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் ஏ.சி.சி சிமெண்ட் நிறுவனம் சார்பில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மூன்று லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு குடும்பத்திற்கு தேவையான ஐந்து கிலோ அரிசி,ஒரு கிலோ பருப்பு,2 கிலோ சர்க்கரை,உப்பு,மசாலா பொடிகள்,புளி,மெழுகுவர்த்தி,பெட்ஷீட் உள்ளிட்ட 12 பொருட்களை ஒரு பெட்டியில் அடைத்து வைத்து மூன்று லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.மேலும் நிவாரண பொருட்களை விநியோகிக்கவும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் அந்நிறுவன ஊழியர்களும் உடன் சென்றுள்ளனர்.

மேலும் படிக்க